Wednesday, July 25, 2007

THUNJALUM THUNJAL (AUIDO)

திருப்பஞ்சாக்கரப்பதிகம்

பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
01
2.
மந்திர நான்மறை யாகி வானவர்சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வனசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
02
3.
ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
03
4.
நல்லவர் தீயரெ னாது நச்சினர்செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவகொல்லந மன்தமர் கொண்டு போமிடத்தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
04
5.
கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடைஅங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
05
6.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
06
7.
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்பீடை கெடுப்பன பின்னை நாடொறும்மாடு கொடுப்பன மன்னு மாநடம்ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
07
8.
வண்டம ரோதி மடந்தை பேணினபண்டையி ராவணன் பாடி யுய்ந்தனதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
08
9.
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
09
10.
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்சித்தத் தவர்கள் தெளிந்து தேறினவித்தக நீறணி வார்வி னைப்பகைக்கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
10
11.
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறைகற்றவன் காழியர் மன்னன் உன்னியஅற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்துற்றன வல்லவர் உம்ப ராவரே.

auido recording of the padhigam: http://www.bnaiyer.com/Lokadharma/LDE-sb-02%20-%20thunjalum.htm

1 Comments:

Blogger kunniyur seenu said...

Highly beneficial to the whole of humanity for them and on behalf other species who do not have the power of intellect and speech

Nandri,Ayyah

4:03 PM

 

Post a Comment

<< Home