Friday, July 07, 2006

8. கோயில் பண் – குறிஞ்சி

ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தேஏழிசையும் ஓங்க எடுத்தார் எமையாளும்காழியர்தங் காவலனார் "கற்றாங் கெரியோம்பி".

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

9. கோயில் பண் - காந்தார பஞ்சமம்

"ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்" என்றெடுத் தார்வத்தால்பாடி னார்பின்னும் அப்பதி கத்தினிற் பரவியபாட் டொன்றில்நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டஅந் நிலைஎல்லாம்கூறு மறுகோத்(து) "அவர்தொழு தேத்துசிற் றம்பலம்" எனக்கூறி.

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.

3. சீர்காழி பண் - தக்கராகம்
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் னின்றேஅருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி அவற்றுள் ஒன்றுவிருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட மேவு காதல்பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றிஎடுத் தருளினார் "பூவார் கொன்றை".
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

4. திருநனிபள்ளி பண் – பியந்தைக் காந்தாரம்

"காரைகள் கூகை முல்லை" எனநிகழ் கலைசேர் வாய்மைச்சீரியற் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில்"நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு வார்தம்பேரிடர் கெடுதற் காணை நம"தெனும் பெருமை வைத்தார்.
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

5. திருவலம்புரம் பண் – பழம்பஞ்சுரம்

கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடிமறையவர் போற்ற வந்துதிருவலம் புரத்து மன்னும்இறைவரைத் தொழுது பாடும் "கொடியுடை" ஏத்திப் போந்துநிறைபுனல் திருச்சாய்க் காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.

6. திருச்சாய்க்காடு பண் - சீகாமரம்
வானள வுயர்ந்த வாயிலுள்வலங் கொண்டு புக்குத்தேனலர் கொன்றை யார்தந் திருமுன்பு சென்று தாழ்ந்துமானிடந் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண்புகார்" என்(று)ஊனெலாம் உருக ஏத்தி உச்சிமேற் குவித்தார் செங்கை.
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே

7. திருவெண்காடு பண் - சீகாமரம்

மெய்ப்பொரு ளாயி னாரை வெண்காடு மெவி னாரைச்செப்பரும் பதிக மாலை "கண்காட்டு நுதல்" முன் சேர்த்திமுப்புரஞ் செற்றார் பாதம் சேருமுக் குளமும் பாடிஒப்பரு ஞானம் உண்டார் உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. சக்கரம்மாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த பாடல்களும் - சம்பந்தர் தேவாரமும்

பெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள் தொகுப்பு பற்றிய குறிப்புகள்
தெய்வச் சேக்கிழார் மூவர் தேவாரங்களை அடியொற்றி மூவர் தம் வரலாறுகளைப் போற்றுவது வெளிப்படையாகக் காணத்தக்கது.
தேவாரங்களைக் குறிப்பதோடு அல்லாமல் அவற்றின் மையக் கருத்துக்களைச், சொற்றொடர்களை பலவாகச் சிரமேற்கொண்டு பெரிய புராணத்தில் போற்றியுள்ளார்.
இத்தொகுப்பு கீழ்க்காணும் முறையைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.
பெரிய புராணத்தில் தேவாரத்தில் காணும் சொற்றொடர்களே காணப்படுவது. (உ-ம். தோடுடைய செவியன்)
புராணத்தில் தேவாரத்தில் கூறப்பட்ட மையக் கருத்து வெளிப்படுத்தப்படுவது. (உ-ம். நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை .. பாடி)
இத்தொகுப்பின் நோக்கம் தேவாரப் பாடல்களோடு அவற்றைக் குறிக்கும் பெரிய புராணப் பாடல்களையும் அடியவர்கள் அதே இசையில் பாடித் திருவருள் பெற வேண்டும் என்பதே.
இத்தொகுப்பு பலமுறை பெரிய புராணத்தில் மீண்டும் மீண்டும் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனினும் பிழைகள் இன்னும் இருக்கக்கூடும். செம்மலர் நோன்தாளைத் தொழும் அடியவர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தல் கோருகின்றோம்.
இத்தொகுப்பு பாட்டே விரும்பும் அருச்சனையாகக் கொள்ளும் இசை விரும்பும் கூத்தனார் திருவடிகளுக்கு அஞ்சலி.

திருச்சிற்றம்பலம்

1. திருப்பிரமபுரம் பண் - நட்டபாடை

செம்மைபெற எடுத்ததிருத் "தோடுடைய செவியன்" எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மைஅடையா ளங்களுடன் சாற்றித் தாதையார்க்(கு)
"எம்மையிது செய்தபிரான் இவனன்றே" எனஇசைத்தார்.
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்
வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்

2. திருக்கோலக்கா பண் - தக்கராகம்

மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணிமீதுபைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளுவானைமைந்நிறைந்த மிடற்றானை "மடையில்வா ளைகள்பாய" என்னும் வாக்கால்,கைந்நிறைந்த ஒத்தறுத்துக் கலைப்பதிகம் கவுணியர்கோன் பாடுங் காலை.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

Seerkazli
Seerkazli is known by various names in the Hindu 'puranam' or mythology. The deity is known as Brahmapureeswarar and the goddess as Thirunilai Nayaki. There are other deities known as Thoniappar and Sattainathar worshipped here. This is also the birthplace of the famous saint Gnanasambanthar.
Location
Seerkazhi is situated in the district of Tanjore between Chidambaram and Mayavaram on the Southern Railway. Busses ply from Chidambaram, Mayavaram and Kumbakonam. The nearest airport is in Trichi.
The Temple
The temple is in the middle of the village with four tall 'gopuram' on each side with a high wall surrounding the temple premises. There is a large 'theertham' within the temple compound next to which there are two shrines, one for the Goddess Thirupurasundary and the other for Gnanasambanthar. The shrines to Thoniappar and Sattainathar are reached by climbing the steps on the rear of the main temple.
Legend
When Sambanthar was three years old he accompanied his father to the temple. The father Sivapatha Iruthayar, got into the water in the temple 'theertham' for his ablution before commencing 'pooja' in the temple. He immersed himself in water and was absorbed in his prayer. Young Sambandar became alarmed when he did not see his father for a long time and called out, "Ammah, Appah". His father did not hear the call from Sambanthar and continued with his prayer. When his father did not appear Sambanthar started wailing. At this moment Lord Shiva appeared with his consort. The Mother Goddess produced some milk in a golden vessel and gave it to Sambanthar to console him. When the father came out of the water he saw milk in the corners of the child's mouth. He was first intrigued but later became angry as he suspected that someone of a lesser caste had fed his son with milk in violation of the practice among their creed. He demanded the child to reveal the identity of the person who fed him with milk. Sambanthar then opened his mouth and sang a hymn in praise of Lord Shiva pointing at the direction of the temple. Sivapatha Iruthayar realised that his son had not only received milk from the almighty but also 'gnanam' (wisdom) by the grace of God. From that day he was known as Gnanasambandar. After this incident Gnanasambanthar was revered as a great soul and was taken to all the holy places where he sang in praise of the deities installed in those temples.
Opening Hours and Festivals
There are six daily 'pooja', three in the forenoon and three in the evening. The Brahmotsavam takes place in the Tamil month of Chiththirai. There are other festivals for the Goddess, Gnana-sambanthar and Sattanathar.
The temple is open from 6am till noon and then from 4pm till 9pm.

Thursday, July 06, 2006


My students are giveing music programme